News June 20, 2024
விமானத் துறையில் பெண்களுக்கான வாய்ப்பு

விமான போக்குவரத்து துறையில் பெண் ஊழியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென, DGCA அறிவுறுத்தியுள்ளது. விமானத் துறையில் 2025ஆம் ஆண்டுக்குள் 25% பெண்களை பணியில் அமர்த்த சிவில் விமான அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Similar News
News November 15, 2025
திங்கள்கிழமை இந்த மாவட்டங்களில் விடுமுறையா?

நாளை, நாளை மறுநாள் (திங்கள்) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நவ.18-ல் காவிரி படுகை மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் தொடரும் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 15, 2025
இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி ஆலோசனை

பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேசிய கட்சியான காங்.,கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன், மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர் தோல்விகள் தொடர்பாகவும், கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
News November 15, 2025
கஞ்சா கேள்வி: ‘இட்லி, தோசை’ என நயினார் பதில்!

தமிழகத்தில் கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அப்போது இடைமறித்த செய்தியாளர், ‘குஜராத்தில் அதிக கஞ்சா பிடிபட்டுள்ளதே?’ என கேட்க, சற்று பின்வாங்கிய நயினார், ‘முதலில் இட்லி, தோசை சாப்பிடுங்கள், அப்புறம் சப்பாத்தி சாப்பிடுங்கள்’ என்றார். அதாவது, முதலில் தமிழகத்தை கவனியுங்கள், பிறகு குஜராத்தை பற்றி பேசலாம் எனக்கூறி, சந்திப்பை முடித்து கொண்டார்.


