News March 17, 2024

திருவாரூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சாருஸ்ரீ பார்வையிட்டு அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

Similar News

News December 9, 2025

திருவாரூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

திருவாரூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4 தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

News December 9, 2025

திருவாரூர்: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

image

கூத்தாநல்லூர் நகர பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற கூத்தாநல்லூர் (ரேடியோ பார்க்) பெண்கள் மேல் நிலை பள்ளியில், வரும் (13.12.2025) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 17 மருத்துவ துறை சார்ந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை எலும்பு முறிவு முதலிய சிகிச்சைகளை பெறலாம்.

News December 9, 2025

திருவாரூர்: கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சமூக நல்லிணக்கத்திற்காக கபீர் பிரஸ்கார் விருது குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. கலவரம் மற்றும் வன்முறை ஆகியவைகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பின் இணையதளம் வாயிலாக 15.12.2025குள் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!