News March 16, 2024
விருதுநகரில் திறப்பு விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News January 17, 2026
ஸ்ரீவி.யில் விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சமரசர்தார் (26) என்பவர் தனியார் மில்லில் பார்த்து வந்துள்ளார். பெற்றோர் இல்லாத இவர், மதுவுக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜன.12ல் விஷம் குடித்த இவரை அங்குள்ளவர்கள் மீட்டு விருதுநகர் G.H-ல் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
விருதுநகர்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.
News January 17, 2026
விருதுநகர்: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜவேல்முருகன் என்பவரது மகன் பத்மேஷ் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பத்மேஷ் மற்றும் தம்பி இருவரும் சைக்கிளில் விளையாடியபோது தம்பி கீழே விழுந்துள்ளார். இதனால் ராஜவேல்முருகன், பத்மேஷை திட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து, பத்மேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


