News October 13, 2025
1 லட்சம் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே

நாடு முழுவதும் 1.04 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 33 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் 12,912 ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. இது ஒரு பள்ளிக்கு 34 மாணவர்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது. துவக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும், மேல்நிலை பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது விதி.
Similar News
News March 17, 2026
பாஜக கேட்டது 35.. அதிமுக கொடுக்க முன்வருவது 27!

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. 35 தொகுதிகள் வழங்குமாறு பாஜக கோரியிருந்த நிலையில், 27 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை வரும் 20-ம் தேதி இறுதி செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
இனி தமிழ்நாடு இவர்கள் கண்ட்ரோலில் இருக்கும்!

TN தேர்தலுக்காக நாளைமுதல் கண்காணிப்பு பணிகளை ECI தொடங்க உள்ளது. இதற்காக 327 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வேட்பு மனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தையும் நேரடியாக கண்காணிப்பார்கள். வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள், சட்டம்-ஒழுங்கு & பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றையும் கண்காணிப்பார்கள். இனி ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவர்கள் கண்காணிப்பில் தான் இருக்கும்.
News March 17, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது UPDATE

ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்று கிடைக்கும் என ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் இன்று ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழு பார்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விரைவில் சென்சார் சான்று கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மே மாதத்தில்தான் படம் ரிலீஸாகும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும்.


