News March 10, 2025
2 வாரங்களுக்கு பிறகு ஒருவர் உடல் மட்டும் கண்டெடுப்பு

தெலுங்கானா, நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கத்தை தோண்டும்போது அதன் மேற்பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கினர். கடந்த 2 வார கால மீட்புப் பணியில் 11 தேசிய அளவிலான மீட்பு குழுவினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு தொழிலாளரின் உடல் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு அவரின் குடும்பத்துக்கு ₹25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்துள்ளது.
Similar News
News March 10, 2025
MP தமிழச்சி தங்கபாண்டியன் சரமாரி கேள்வி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கான நிதி குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பினார். மத்திய அரசின் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது என அவர் குற்றம்சாட்டினார். மேலும், கல்வி நிதியை தமிழகத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
News March 10, 2025
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. இதில் பட்ஜெட் தொடர்பாக 13 மசோதாக்களையும், மணிப்பூர் மாநில பட்ஜெட்டையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
News March 10, 2025
‘அவசர’ பிரச்சினையால் திக்குமுக்காடிய ‘ஏர் இந்தியா’

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டெல்லிக்கு 348 பயணிகளுடன் நேற்றிரவு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 10 கழிவறைகள் இருந்த நிலையில், அதில் ஒன்று மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால் 10 மணிநேரமாக கடும் சிரமத்தை சந்தித்த பயணிகள், ஒருகட்டத்தில் கோபமடைந்தனர். இதனால் வேறு வழியின்றி மீண்டும் சிகாகோவுக்கே விமானம் திரும்பிச் சென்றது. என்ன கொடுமை பாஸ்..