News May 17, 2024

கோலியால் மட்டுமே அதை செய்ய முடியும்

image

அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் ரன்களை குவிப்பது சிரமம் என பஞ்சாப் அணி வீரர் ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். அனைத்து டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பதாக ஆதங்கம் தெரிவித்த அவர், தொடர்ந்து ரன்களை கோலியால் மட்டுமே குவிக்க முடியும் என்றார். முன்னதாக பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதிய போது ரைலீ ரூஸோவ் மற்றும் கோலி இருவரும் சைகைகள் மூலம் மாறிமாறி மோதிக்கொண்டனர்.

Similar News

News December 9, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: இன்று விசாரணை

image

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி G.R.சுவாமிநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவிட்டும் ஏற்றாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 9, 2025

அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.. புதிய திருப்பம்

image

கோவையில் உள்ள தனது இல்லத்தில் TTV தினகரனுக்கு அண்ணாமலை நேற்று இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால், அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளாராம். டிடிவி கூட்டணி ஆப்சனை ஓப்பனாக வைத்திருக்கும் நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News December 9, 2025

55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

image

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், புதிய கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.07 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தகுதியான 55,000 பேருக்கு ஒரு சில நாள்களிலும், மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள்ளும் கார்டுகள் வழங்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!