News May 17, 2024

கோலியால் மட்டுமே அதை செய்ய முடியும்

image

அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் ரன்களை குவிப்பது சிரமம் என பஞ்சாப் அணி வீரர் ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். அனைத்து டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பதாக ஆதங்கம் தெரிவித்த அவர், தொடர்ந்து ரன்களை கோலியால் மட்டுமே குவிக்க முடியும் என்றார். முன்னதாக பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதிய போது ரைலீ ரூஸோவ் மற்றும் கோலி இருவரும் சைகைகள் மூலம் மாறிமாறி மோதிக்கொண்டனர்.

Similar News

News October 27, 2025

FLASH: ஷ்ரேயஸுக்கு ICU-வில் சிகிச்சை

image

இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் ஷ்ரேயஸ் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்ற IND Vs AUS இடையேயான கடைசி ஒருநாள் போட்டியின்போது, ஆஸி., வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, ஷ்ரேயஸ் நீண்ட தூரம் பின்னோக்கி ஓடி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த முயற்சியில் அவரது இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டு உட்புற ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News October 27, 2025

USA-வின் 100% வரியில் இருந்து தப்பியதா சீனா?

image

சீனா மீதான USA-ன் 100% வரி நவ.1-ல் அமலுக்கு வரவிருந்தது. இதுதொடர்பாக இரு நாடுகளும் 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தின. அதில், முன்னேற்றமும் காணப்பட்டதால் வரியை உயர்த்தும் முடிவில் இருந்து USA பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அக்.30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ளார். அன்றைய தினம் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 27, 2025

ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் புஸ்ஸி ஆனந்த்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்தின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. SC-யின் தீர்ப்பின்படி, கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்மனுதாரராக கரூர் போலீஸ் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த தனது முன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

error: Content is protected !!