News April 16, 2024

UPSC தேர்வில் தமிழகத்தில் மட்டும் 42 பேர் தேர்ச்சி

image

UPSC முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 42 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் மொத்தம் 1,143 பேர் தேர்ச்சியடைந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புவனேஷ் ராம் என்பவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 10, 2025

விவசாயத்தில் நல்ல லாபம் பார்க்கணுமா? இதோ வழி!

image

பயிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விற்பனை செய்ய இ-நாம் (e-NAM) அரசு செயலி உதவுகிறது. இதன்மூலம் லாபம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும். இதற்கு இச்செயலியில் நீங்கள் அறுவடை செய்த பயிரின் தகவலை உள்ளிடவேண்டும். ஒருவேளை நீங்கள் விவசாயி இல்லையெனில், செயலியில் வர்த்தகராக பதிவு செய்யலாம். விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்கி, அதை உணவு நிறுவனங்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கலாம். SHARE.

News November 10, 2025

SIR மூலம் திமுகவை அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

image

SIR மூலம்தான் திமுகவை அழிக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள்; அந்த முயற்சி ஒருபோது எடுபடாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை என சாடிய அவர், DMK தொடர்ந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி ADMK மனு தாக்கல் செய்தது கபட நாடகம் என விமர்சித்தார். மேலும், உண்மையிலேயே அக்கரை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்து இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.

News November 10, 2025

Magic அரிசி: சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்!

image

அரிசியை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஊறவைத்த பின் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் அரிசி தெரியுமா? அசாமின் கோமல் சால் எனப்படும் மந்திர அரிசி தான் அது. இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறிவிடும். இதன் பயன்பாடு காலப்போக்கில் குறைந்த நிலையில், சமைக்க நேரமில்லாமல் ஓடும் மக்களால், மீண்டும் இதற்கு மவுசு கூடியுள்ளது. ஆன்லைனில் கூட விற்பனை தொடங்கியுள்ளது.

error: Content is protected !!