News August 28, 2025
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது 3 பேர் மட்டுமே: NIA

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் மட்டுமே இருப்பதாக NIA உறுதி செய்துள்ளது. ஆபரேஷன் மகாதேவின் போது 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், NIA-ன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. 4-க்கும் அதிகமான தீவிரவாதிகள் இருந்ததாக தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் போலீசாரின் கூற்றை NIA மறுத்துள்ளது.
Similar News
News March 7, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து.. புதிய ஆதாரம் வெளியானது

விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க முடியாது என வழக்கறிஞர் மூலம் தனக்கு மிரட்டல் வந்ததாக விஜய்யின் <<19319143>>மனைவி சங்கீதா<<>> செங்கல்பட்டு கோர்ட்டில் புதிய வழக்கு தொடுத்துள்ளார். அதில், தனக்கு நீதி கிடைக்கும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க உரிமை உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், விஜய்யின் விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பொது விவாதமாக மாறி வருகிறது.
News March 7, 2026
அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக: அதிமுக

சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ பயிற்சி மையத்தில் பயின்று வெற்றிபெற்ற மாணவர்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வென்றதாக கூறி விளம்பரம் செய்வது வெட்கக்கேடு என அதிமுகவின் பாப்புலர் முத்தையா விமர்சித்துள்ளார். அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக அரசு, விளம்பர அரசியல் செய்வதாக சாடிய அவர், மக்கள் வரிப்பணத்தை செலவழித்து பொய் விளம்பரம் செய்வதை விடுத்து, உண்மையான உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
News March 7, 2026
BREAKING: விஜய் மனைவி அடுத்த பரபரப்பு

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி, விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தனக்கு தனியாக வீடு இல்லை. நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ள அவர், விவாகரத்து வரை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என விஜய்க்கு உத்தரவிட கோரியுள்ளார்.


