News March 29, 2025
இன்னும் 2 நாள்கள் மட்டுமே… உடனே செய்யுங்கள்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க e-KYC செய்வதற்கு மார்ச் 31 தான் கடைசி நாளாகும். இதை செய்யத் தவறினால், ரேஷனில் பொருள்கள் வாங்க முடியாமல் போகும். உங்கள் ரேஷன் கார்டு டி-ஆக்டிவேட் செய்யப்படலாம் (அ) ரத்து செய்யப்படலாம். ஆகவே, இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று செய்யலாம். இ-சேவை மையங்கள் அல்லது வீட்டிலிருந்தே இணையம் மூலமாக ஆன்லைனிலும் e-KYC அப்டேட் செய்யலாம்.
Similar News
News April 1, 2025
நவீன தமிழ் சினிமாவின் அடையாளங்கள்

இயக்குநர் பாலசந்தரின் படங்களில்தான் முதன்முதலில் வலிமையான பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன. கிராமத்து மண்வாசனை, உறவுமுறைகளை திரையில் காட்டி பாரதிராஜா புரட்சி செய்தார். பாலுமகேந்திராவின் படங்கள் எளிமையும், நுண்ணுணர்வும் மிக்கதாய் இருக்கும். தமிழ் சினிமாவில் டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மணிரத்னம். இவரது படங்களில் காட்சியமைப்பு தனித்துவம் மிக்கதாய் இருக்கும்.
News April 1, 2025
டாஸ்மாக்- ED விவகாரம்.. இன்று விசாரணை

டாஸ்மாக் நிறுவனத்தில் ED ரெய்டு நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. டாஸ்மாக் தலைமையகத்தில் ரெய்டு நடத்தி, ₹1,000 கோடி வரை முறைகேடு நடந்ததாக ED அறிக்கை வெளியிட்டது. இதை சட்டவிரோதம் என அறிவிக்கவும், தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில், அனுமதியின்றி ரெய்டு நடத்த கூடாது என உத்தரவிடக் கோரியும் அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
News April 1, 2025
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்

*தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகளில் 5%-10% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. *பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிந்தால் 1% பத்திரப் பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. *செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட UPI ஐடிகளை இன்று முதல் பயன்படுத்த முடியாது. *ஆண்டுக்கு ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. *மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் அமலுக்கு வந்தது.