News August 23, 2025
ஆன்லைன் கேமிங் மசோதா: ஜனாதிபதி ஒப்புதல்

ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் கேம்களை தடை செய்யும் வகையில் ‘ஆன்லைன் கேமிங் மசோதா 2025’-யை நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்பின் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பபட்ட நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2026
பாஜக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

நாகை-காந்தி, ராதாபுரம்-பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர்-அனந்தன் அய்யாசாமி, ஆவடி-ராஜசிம்மா, உதகை-போஜ ராஜன், திருப்பூர் தெற்கு-தங்கராஜ், திருவாரூர்-கோவி சந்துரு, கந்தர்வகோட்டை-உதயகுமார், தஞ்சை-கருப்பு முருகானந்தம், பத்மநாபபுரம்-ரமேஷ், குளச்சல்-சிவக்குமார், தளி-நாகேஷ் குமார், புதுக்கோட்டை-ராமசந்திரன், அறந்தாங்கி-கவிதா, திருப்பத்தூர்-திருமாறன், ராமநாதபுரம்- நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பை தேடவும் உதவுகிறது. இதில் வீடியோ வடிவில் பாடங்களை நீங்கள் கற்கலாம். <
News April 3, 2026
BREAKING: அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

தேர்தலில் அண்ணாமலை களமிறங்க வேண்டும் என உறுதியாக இருந்த பாஜக, அவரை திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட வைக்க முயற்சித்தது. ஆனால், கடைசி வரை கோவை வடக்கு தொகுதி வேண்டும் என அவர் டிமாண்ட் செய்தாராம். இதனால் தான், அண்ணாமலையை தேர்தலில் களமிறக்கும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


