News March 17, 2024
பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதல் விடுமுறை..?

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 நடைபெறவுள்ளதால், 1 -9ம் வகுப்புக்கு முன்னதாகவே இறுதித்தேர்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் 1 & 2ல் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ம் தேதி முடிவுக்கு வருவதால், அதன்பின்பு ( ஒருவாரம் கூடுதல் லீவ்) பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது.
Similar News
News October 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 494
▶குறள்:
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
▶பொருள்: ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
News October 20, 2025
தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்

இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை புதுமண தம்பதிகளுக்கு கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். அந்த வகையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை SWIPE செய்து பாருங்கள்.. அதோடு தலை தீபாவளி வாழ்த்துகளை லைக்ஸ் போட்டு தெரிவிக்கவும்.
News October 20, 2025
விரைவில் வரும் சீமானின் தண்ணீர் மாநாடு

சீமான் ஏற்கெனவே ஆடு, மாடு மாநாடு மற்றும் மலைகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், தஞ்சையில் நவ.15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.