News March 18, 2024
ஆற்காடு நகராட்சிக்கு ஆயிரம் பூவரசு மர விதைகள்

கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் நடராஜ் நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் பல்வேறு இயற்கை பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமையை மேம்படுத்தும் விதமாக நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் ஆயிரம் பூவரசு மர விதைகளை ஆற்காடு நகராட்சிக்கு வழங்கினார்.
Similar News
News January 20, 2026
ராணிப்பேட்டை: House Owner தொல்லையா? உடனே CALL

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT
News January 20, 2026
ராணிப்பேட்டை: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியதை முன்னிட்டு, ராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தி சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்தார். அப்போது பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியல் மரபை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.


