News October 5, 2025
6 நிமிடத்துக்கு ஒரு ரேப்; 17 நிமிடத்துக்கு ஒரு கொலை

இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. NCRB அறிக்கைபடி 2023-ல்: *1 நிமிடத்துக்கு 1 திருட்டு *3 நிமிடங்களுக்கு ஒரு மோசடி *4 நிமிடங்களுக்கு ஒரு குடும்ப வன்முறை *5 நிமிடங்களுக்கு ஒரு கொள்ளை *6 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை *17 நிமிடத்துக்கு ஒரு கொலை *18 நிமிடத்துக்கு ஒரு பலாத்காரம் நடந்துள்ளது. கடந்த ஆண்டில் இது மேலும் அதிகரித்திருக்கும் என கணிக்கப்படுகிறது.
Similar News
News October 5, 2025
சோனம் வாங்சுக் விடுதலை கோரிய மனு நாளை விசாரணை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு முக்கிய காரணம் என காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் கணவர் குற்றமற்றவர் எனக் கூறி, அவரை விடுதலை செய்யுமாறு, அவரது மனைவி கீதாஞ்சலி SC-ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நாளை (அக்.6) அரவிந்த் குமார், NV அஞ்சரியா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணக்கு வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது.
News October 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 479 ▶குறள்: அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். ▶பொருள்: தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.
News October 5, 2025
பிம்பங்களை நம்புவதும் மூடநம்பிக்கை: கனிமொழி

மூதாதையர்கள் சொன்னதை அப்படியே கடத்துவது மட்டும் மூடநம்பிக்கையல்ல, நம்மை ஆள்வதற்கு தகுதி உண்டா இல்லையா என்று தெரியாமல் சில பிம்பங்களை நிஜமாக நம்புவதும் மூடநம்பிக்கை தான் என்று விஜய்யை கனிமொழி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒருவர் வந்துவிட்டார், அவர் மாற்றிவிடுவார் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே என்றும் சாடினார். இனி கற்பிக்கும் மூடநம்பிக்கைகளையும் கடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.