News November 30, 2024
மழையால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநிலத்தை சேர்ந்த சந்தன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 28, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை <<16241060>>CM ஸ்டாலின்<<>> வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது. 01.01.2025 தேதியில் இருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ₹10,000-ல் இருந்து ₹20,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News April 28, 2025
பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
News April 28, 2025
மார்ட்டின் ஸ்கார்செஸி படத்தில் ஜான்வி கபூர்!

உலக சினிமாவின் ஜாம்பவான் மார்ட்டின் ஸ்கார்செஸி, ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படத்தில் Executive producer-ஆக இணைந்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் ‘ஹோம்பவுண்ட்’ படத்தில் அவர் இணைந்திருப்பது, படத்தை உலக ரசிகர்களுக்கு கொண்டு செல்லும். கரண் ஜோகர் தயாரித்துள்ள இப்படத்தில், ஜான்வி கபூர், இஷான் கட்டர் ஆகியோர் நடித்துள்ளனர். மசான் படத்தை இயக்கிய நீரஜ் கைவான் இயக்கி உள்ளார்.