News July 4, 2025

One Last time.. ராஜஸ்தானை உலுக்கிய தற்கொலை

image

தனது 8 வயது மகனுக்கு துப்பட்டா அணிவித்து, நெற்றியில் குங்குமமிட்டு, தங்க நகைகளையும் போட்டு போட்டோ எடுத்துள்ளார். பின்னர், சிறுவன் உள்பட இக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் தண்ணீர் டேங்கில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் நிலத்தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், தனக்கு பெண் பிள்ளை இல்லாததால் இளைய மகனை பெண்ணாக கடைசியாக அழகு பார்த்துள்ளார் தாய். இது ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

Similar News

News December 9, 2025

இன்று அனல் பறக்க போகும் நாடாளுமன்றம்

image

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடக்க உள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

News December 9, 2025

டிசம்பர் 9: வரலாற்றில் இன்று

image

*உலக ஊழல் எதிர்ப்பு நாள். *1946 – இந்திய அரசியலமைப்பை வரையறை செய்ய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது. *1946 – சோனியா காந்தி பிறந்தநாள். *1979 – பெரியம்மை வைரஸ் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. *1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 திமுக MLA-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

News December 9, 2025

இந்தியாவில் மீண்டும் தாக்குதல்.. உளவுத்துறை அலர்ட்

image

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த JeM, LeT தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளதாகவும், PoK வழியாக நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!