News October 22, 2025
தீபாவளியில் ஒரு லட்சம் கோடி UPI பரிவர்த்தனை!

நடப்பு மாதத்தில் UPI பரிவர்த்தனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பரை காட்டிலும், நடப்பு மாதத்தில் நாளொன்றின் சராசரி பரிவர்த்தனை 13% அதிகரித்து ₹94,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும், தீபாவளிக்கு முதல் நாளில் மட்டும் உச்சபட்சமாக 74 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதன்மூலம் தினசரி பரிவர்த்தனை ஒரு லட்சம் கோடியை தாண்டியது. GST 2.0, பண்டிகை காலம் ஆகிய காரணங்களால் உச்சம் தொட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
மனிதனிடம் இந்த திறமைகள் அழிஞ்சிட்டு வருது!

தற்போது, டெக்னாலஜி இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். சிறு வேலையாக இருந்தாலும், ஒருவருக்கு டெக்னாலஜியின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், இப்படியான உதவியால், மனிதனிடம் இருந்த பல திறமைகள் மெல்ல அழிந்து வருகின்றன. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இன்னும் என்ன திறமையை எல்லாம் நாம் இழப்போம் என கமெண்ட் பண்ணுங்க?
News October 24, 2025
தங்கம் வாங்க இது சரியான நேரமா?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போவதால், தற்போது தங்கம் வாங்குவது சரியான முதலீடா? இப்போது ஏறும் விலை திடீரென சரியுமா என பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால், இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய உச்சத்தை அடையும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர். அதனால், தற்போது கையில் காசு உள்ளவர்கள் பிக்சட் டெபாசிட்டுக்கு பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்யவும் அறிவுறுத்துகின்றனர்.
News October 24, 2025
தொழில் தொடங்க ₹10 லட்சம் வரை கடன் தரும் அரசு

சொந்த தொழில் தொடங்க ₹10 லட்சம் வரை கடன் தந்து, தொழிற்பயிற்சியும் தருகிறது மத்திய அரசின் ரோஸ்கர் யோஜனா திட்டம். இந்த கடனை பெற விண்ணப்பதாரர் 18 – 35 வயதுக்குட்பட்ட வேலையில்லாத நபராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம். ₹1 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடனை பெற <


