News September 17, 2024
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை: ப.சிதம்பரம்

தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார். குறைந்தபட்சம் அரசியலமைப்பில் 5 திருத்தங்கள் மேற்கொண்டால் மட்டுமே ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் என்றும், ஆனால் காங்கிரஸ் அதை கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு மக்களவை, மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News August 20, 2025
மாலை 6 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

*PM, CM, மத்திய அமைச்சர்கள் 30 நாள்கள் வரை சிறையில் இருந்தால், அவர்களது பதவி பறிக்கும் <<17462647>>மசோதா<<>> லோக்சபாவில் தாக்கல். *பதவியை பறிக்கும் மசோதாவை கருப்பு மசோதா எனவும், இன்று கருப்பு நாள் என்றும் <<17464824>>CM ஸ்டாலின்<<>> கண்டனம். *<<17463695>>தவெக<<>> மாநாட்டு பணியின் போது, 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து. *<<17464229>>கூலி<<>> படத்திற்கு U/A சான்றிதழ் கோரி தாக்கல் செய்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
News August 20, 2025
தமிழகத்தில் 7 மாதங்களில் 850 கொலை: சாடிய EPS

திமுக தேய்ந்து கொண்டிருப்பதால் வீட்டின் கதவை தட்டி உறுப்பினர்களை சேர்த்து வருவதாக EPS சாடியுள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றார்.
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டுக்கு புதிய சிக்கல்

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிகளை 1 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது, தொடர்பாக ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிகள், பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.