News March 17, 2024
மார்ச் 19, 20ல் தேமுதிக விருப்ப மனு

தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 19, 20ஆம் தேதிகளில் விருப்பமனு பெறலாம் என பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 3, 2025
TNPSC குரூப் 4: ஜனாதிபதிக்கு தேர்வர்கள் கடிதம்

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, முனைவர் பட்ட அளவிலான கேள்விகளை உள்ளடக்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சீலிடப்படாத கேள்வித்தாள்கள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுதேர்வு நடத்த வேண்டும், குளறுபடிகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி, PM, கவர்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
News September 3, 2025
ஆப்கனுக்கு 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது. போர்வைகள், டெண்ட்டுகள், மருந்து பொருள்கள், தண்ணீர் டேங்கர்கள், வீல்சேர்கள், சானிட்டைசர் உள்ளிட்ட 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
50% வரி விதிக்க சொன்னதே மோடி தான்: ஆ.ராசா

50% வரியை டிரம்ப் விதிக்கவில்லை, அதை போடச் சொன்னதே PM மோடி தான் என்று ஆ.ராசா சாடியுள்ளார். USA-வின் கூடுதல் வரிவிதிப்புக்கு எதிராக திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை விற்றுக் கொண்டிருப்பதாகவும், அம்பானியும் அதானியும் இந்தியாவை வாங்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். USA-வின் வரிவிதிப்பால் தமிழகத்திற்கு அதிக பாதிப்பு என ஸ்டாலின் கூறியிருந்தார்.