News August 16, 2024
ஆக.20ல் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்படுகிறது

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி ஆக.20 ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் ஆக.17 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விதிகளின்படியே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
Similar News
News January 2, 2026
கிருஷ்ணகிரி: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW

கிருஷ்ணகிரி மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <
News January 2, 2026
RO-KO விளையாட அதிக ODI நடத்த வேண்டும்: பதான்

IND vs NZ இடையே 3 போட்டிகளைக் கொண்ட ODI தொடர், வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 5 போட்டிகளை கொண்ட தொடரை ஏன் நடத்தக் கூடாது என இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தரப்பு, நான்கு தரப்பு ODI தொடர்களை நடத்தலாமே எனவும், RO-KO தொடர்ந்து விளையாட, அதிக ODI-களை BCCI நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கடைசியாக 2019-ல் 5 போட்டிகளைக் கொண்ட ODI தொடரில் விளையாடியது.
News January 2, 2026
‘பொங்கல் பரிசாக ₹5,000 வழங்குக’.. நயினார் அறிக்கை

பொங்கல் பரிசு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கலுக்கு ₹5,000 வழங்குவார்கள் என எதிர்பார்த்துவரும் நிலையில், மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை பரிசளித்துள்ளதாக சாடியுள்ளார். ஆட்சி முடியும் தருவாயிலாவது போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து, ₹5,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை சரிவர வழங்குமாறு CM ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். உங்க கருத்து?


