News August 16, 2024

ஆக.20ல் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்படுகிறது

image

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி ஆக.20 ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் ஆக.17 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விதிகளின்படியே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

Similar News

News November 26, 2025

சென்னை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

சென்னை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <>கிளிக் <<>>செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். உடனே ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்த அன்வர் ராஜா!

image

TN அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன், திமுகவுக்கு வர வேண்டும் என அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, <<18392822>>அமைச்சர் சேகர்பாபுவும்<<>> செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, நேற்று(நவ.25) மெளனம் சாதித்த செங்கோட்டையன், இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.

News November 26, 2025

யார் இந்த பொல்லான்?

image

ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். காவிரி கரையோர போர்(1801), சென்னிமலை போர்(1802), அரச்சலுார் போர்(1803) ஆகியவற்றில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான்தான் முக்கிய காரணம். ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவிய பொல்லான் தந்திரங்களை அறிந்து, சின்னமலையை வெற்றிபெற வைத்தார். சிறந்த வாள்வீச்சு வீரராக திகழ்ந்த பொல்லான், 1805-ல் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

error: Content is protected !!