News August 16, 2024
ஆக.20ல் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்படுகிறது

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி ஆக.20 ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் ஆக.17 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விதிகளின்படியே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
Similar News
News November 19, 2025
குரியன்விளை கோவிலில் 1008 இளநீர் அபிஷேகம்

களியக்காவிளை அருகே குரியன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாள் தேவியின் சுயம்புவில் இளநீர் அபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் கார்த்திகை மாத முதல் நாளான நேற்று கணபதி ஹோமம் விக்கிரமன் சுவாமி தலைமையில் நடந்தது. தொடர்ந்து தேவியின் சுயம்பு எழுந்தருளல், பக்தர்கள் சமர்பித்த 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள், பெண்கள் பலர் பங்கேற்றனர்.
News November 19, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
பெரம்பலூர்: உலகக் கோப்பை வரவேற்ற கலெட்கர்!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு நேற்று வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றி உலகக் கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைத்தனர்.


