News August 16, 2024
ஆக.20ல் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்படுகிறது

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி ஆக.20 ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் ஆக.17 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விதிகளின்படியே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிணைந்து, மத்திய அரசை கண்டித்தும் எதிரான கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 9, 2025
BREAKING: விஜய்க்கு சீமான் ஆதரவு

விஜய்யை அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்துவரும் சீமான், தற்போது விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில உரிமை கோரிய விஜய்யின் கருத்துக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார். மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என முதலில் நான்தான் புதுச்சேரிக்காக பேசினேன் என்றும், எனது கோரிக்கை வலுபெறகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
News December 9, 2025
புதுச்சேரி முதல்வருக்கு விஜய் பாராட்டு

புதுச்சேரியில் இன்று பொதுகூட்டம் நடத்திய விஜய், அதற்கு பாதுகாப்பு அளித்த மாநில அரசையும், CM ரங்கசாமியையும் மீண்டும் பாராட்டியுள்ளார். மேலும் எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினர், கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள் எனவும் X பதிவில் குறிப்பிட்டுள்ளார். நம் அரசியல் பயணத்தை முடக்க திமுக போடும் திட்டம் அணுவளவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


