News March 28, 2024
கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்

தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் சத்தமில்லாமல் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளன. வழக்கமாக சாதாரண இருக்கை வசதி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு ரூ.700 முதல் ரூ.1,000 வரை கட்டணம் பெறப்படும். ஆனால் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் அதிகம் செல்வதை பயன்படுத்தி ரூ.5,000ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News November 2, 2025
காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் போய்விட்டது: PM

ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து காங்., பாக்., இன்னும் மீளவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரத்தில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடே கொண்டாடிய நிலையில், காங்., RJD அதை விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் பறிபோய்விட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், CM பதவிக்காக எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 2, 2025
பிரசவ நாள் நெருங்கும்போது செய்ய வேண்டியவை

➤குழந்தையின் நிலை, இதயத்துடிப்பு, தாயின் ஆரோக்கியம் ஆகியவை சீராக உள்ளனவா என்பதை தொடர்ந்து செக் பண்ணுங்க ➤சத்தான உணவு, பழம், பால் போன்றவற்றைச் சீராக எடுத்துக் கொள்ளவும் ➤மெதுவான நடைபயிற்சி/மருத்துவர் பரிந்துரைத்த யோகா செய்யலாம் ➤ஆடைகள், டயப்பர், மருத்துவ ஆவணங்கள், சார்ஜர், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள் ➤ கர்ப்பிணியை தனியாக விட வேண்டாம். SHARE THIS.
News November 2, 2025
மழை வெளுக்கப் போகுது… வெளியே வராதீங்க

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகையால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!


