News April 2, 2024
ஆம்னி பேருந்து விபத்து: 2 பேர் பலி

திருச்சி அருகே லாரி மீது மோதி ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், பேருந்து ஓட்டுநர், பெண் பயணி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
Similar News
News August 13, 2025
வெறும் 7 நிமிடங்கள் தான்.. கேன்சருக்கு புதிய வகை ஊசி!

ரோச் நிறுவனத்தின் கேன்சர் சிகிச்சைக்கான Atezolizumab (Tecentriq) என்று மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து உடலின் நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி, கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது. முன்பு இந்த மருந்தை உடலில் செலுத்த 60 mins தேவைப்பட்டது. ஆனால், புதிய Atezolizumab-ஐ வெறும் 7 mins-ல் செலுத்தலாம். இதனால் ஹாஸ்பிடல் செலவும் கூட குறையுமாம்.
News August 13, 2025
தமிழகம் வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே ஜனாதிபதி பங்கேற்க இருந்த நிலையில் கடை நேரத்தில் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
News August 13, 2025
தமிழகத்தை உலுக்கிய கொலை.. முக்கிய திருப்பம்

தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக் கொலையில் முக்கிய திருப்பமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் தந்தை சரவணன், சகோதரர் சுர்ஜித் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.