News July 28, 2024

OLYMPICS: முதல் இளம் நடுவரான இந்தியர்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் குத்துச்சண்டைப் பிரிவில் இளம் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த கபிலன் சாய் அசோக் (32) நியமிக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக்ஸில் நடுவரான 4வது இந்தியர் & உலக சாம்பியன்ஷிப்பில் அதிகாரியாக பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். சர்வதேச குத்துச்சண்டை கவுன்சிலில் தலைவராக இருந்த அவர், 2 நட்சத்திர அந்தஸ்திலிருந்து, 3 நட்சத்திர அந்தஸ்துக்கு மிக விரைவாக முன்னேறிய ஒரே நடுவராக திகழ்கிறார்.

Similar News

News March 4, 2026

காங்கிரஸுடன் கூட்டணி.. திமுகவினர் அதிருப்தியா?

image

திமுக-காங்., தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 36 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட் என்ற கணக்கிற்கு இறங்கிவந்த காங்கிரஸிடம், 28 + 1 கொடுக்க தயார் என திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால், காங்., கொடுக்கும் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் 27+ 1 கொடுப்பதே அதீதம் என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

News March 4, 2026

₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

image

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.

News March 4, 2026

ஈரானின் உயர் தலைவரானார் கமேனியின் மகன்

image

போரில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானின் புதிய உயர் தலைவராக முஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. இவர் கமேனியின் 2-வது மூத்த மகன் ஆவார். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கொடுத்த அழுத்தத்தினால், ஷியா மதகுருக்கள் இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஈரானில் பரம்பரை ஆட்சி முறை எதிர்க்கப்படும் நிலையில், முஜ்தபாவின் தேர்வு சர்ச்சையாகியுள்ளது.

error: Content is protected !!