News November 5, 2024

கடலூரில் ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

image

கடலூர் அடுத்த உச்சிமேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன் (70). இவர் இன்று காலை பெரிய கங்கணாங் குப்பத்தில் உள்ள ஆற்றின் கரைக்கு சென்று இயற்கை உபாதை கழித்துவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் கை கால்களை கழுவ இறங்கினார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 20, 2025

கடலூர்: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

கடலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

கடலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460324>>தொடர்ச்சி<<>>

News August 20, 2025

கடலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!