News August 26, 2025
ஓஹோ.. இதுதான் விநாயகர் சதுர்த்தியின் கதையா!

மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்ல முடியாத வரம் பெற்றிருந்த கஜமுகாசுரனை விநாயகர் ஆவணி மாத சதுர்த்தி தினத்தில் வதம் செய்தார். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் ஒன்றுகூட தடை இருந்த நிலையில், மக்களை திரட்ட எண்ணிய பாலகங்காதர திலகர், 1893-ல் இந்த பண்டிகையை சமூக நிகழ்வாக மாற்றி, இன்றைய கொண்டாடத்திற்கான வடிவத்தை கொடுத்தார்.
Similar News
News August 26, 2025
திருச்சி: பறவைகள் பூங்கா நாளை செயல்படும்

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே அமைந்துள்ள பறவைகள் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதத்தின் கடைசி புதன்கிழமை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளைய தினம் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால், பொதுமக்கள் வருகையை கருத்தில் கொண்டு, நாளைய தினம் பறவைகள் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
காலை உணவின் தரத்தை உயர்த்துக: நயினார்

போலி விளம்பரங்களால் குளறுபடிகளை மறைத்துவிட திட்டமா என நயினார் சாடியுள்ளார். தாராபுரம், பூனாயிருப்பு அரசு துவக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை CM-க்கு சுட்டிக்காட்டிய அவர், ஏழைக்குழந்தைகள் தானே படிக்கிறார்கள் என்ற அலட்சியத்தோடு உணவு தயாரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். காலை உணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை விரிவுப்படுத்துவது பலனளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.