News October 15, 2025

வதந்தி பரவியதால் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்: CM

image

கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதாலேயே அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக CM பதிலளித்துள்ளார். MGR,ஜெயலலிதா ஆகியோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் தானே பேட்டி அளித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

கொலை வழக்கில் பாஜக நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை

image

கோவையில் இளைஞர் கொலை வழக்கில் பாஜக மண்டலத் துணை தலைவர் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 -ல் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தொடர்பான மோதலில் நாகராஜ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதில் கந்தசாமி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனையுடன், ₹10,000 அபராதமும் விதித்துள்ளது.

News October 15, 2025

BREAKING: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.. ராஜினாமா செய்தார்

image

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால், 5 மண்டல தலைவர்களை உடனடியாக ராஜினாமா செய்ய CM ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிமுக சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்திராணியின் ராஜினாமா சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 15, 2025

இந்தியா வந்தவருக்கு நேர்ந்த சோகம்… PM மோடி இரங்கல்

image

முன்னாள் கென்ய பிரதமர் ரைலா ஒடிங்கா காலமானார். கேரளாவில் உள்ள ஆயுர்வேத கண் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அவரை அழைத்து சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரைலா ஒடிங்கா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள PM மோடி, அவரை இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!