News March 16, 2024
சலுகைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் (திங்கள்கிழமை தோறும்) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது. தனிநபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். அத்துடன் விவசாயிகள், மீனவர் கோரிக்கை தினக் கூட்டங்கள் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.
Similar News
News December 6, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
News December 6, 2025
சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
News December 6, 2025
ஜார்கண்டிடம் சரணடைந்த தமிழ்நாடு அணி

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியிடம் தமிழ்நாடு வீழ்ந்தது. முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணியில் குமார் குஷாக்ரா(84), விராட் சிங்(72) ஆகியோர் TN பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் தமிழ்நாட்டுக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சாய் சுதர்சனை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால், 20 ஓவர்களில் 179 ரன்களை மட்டுமே எடுத்த TN, தோல்வியடைந்தது.


