News March 16, 2024
சலுகைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் (திங்கள்கிழமை தோறும்) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது. தனிநபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். அத்துடன் விவசாயிகள், மீனவர் கோரிக்கை தினக் கூட்டங்கள் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.
Similar News
News December 6, 2025
திமுக – பாஜக இடையே மறைமுக உறவு: ஜெயக்குமார்

அதிமுக யாருடைய காலிலும் விழவில்லை, திமுக தான் டெல்லிக்கு சென்று பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது என ஜெயக்குமார் பேசியுள்ளார். திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு மறைமுக உறவு இருப்பதாக கூறிய அவர், தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கான முழு ஆதரவை திமுக நிச்சயம் வழங்கும் என தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு அதிமுக மூத்த தலைவர் இப்படி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 6, 2025
BREAKING: தமிழ்நாட்டில் நள்ளிரவில் பயங்கர விபத்து

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கீழக்கரை அருகே ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்கள் சென்ற கார், எதிரே வந்த கார் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து விபத்து நிகழ்வது குறிப்பிடத்தக்கது
News December 6, 2025
அகண்டா 2 ரிலீஸ் ஆகாததற்கு இதுதான் காரணமா?

பாலையா ஃபேன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த அகண்டா 2 வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்த 14 ரீல்ஸ் நிறுவனம், முந்தைய பட தயாரிப்புகள் காரணமாக ஈரோஸ் நிறுவனத்துக்கு ₹28 கோடி செலுத்த வேண்டும் என பேசப்படுகிறது. இதை கொடுக்காததால் படத்தை தடைசெய்யக்கோரி ஈரோஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னையை தீர்த்து வருவதாக 14 ரீல்ஸ் கூறியதால், படம் டிச.20-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


