News March 16, 2024
சலுகைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் (திங்கள்கிழமை தோறும்) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது. தனிநபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். அத்துடன் விவசாயிகள், மீனவர் கோரிக்கை தினக் கூட்டங்கள் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.
Similar News
News August 17, 2025
3 முதல்வர்கள் ஒன்றாக திறந்த வைத்த தியேட்டர் இடிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கொடிகட்டி பறந்த கே.பி.எஸ். (பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாளால் கட்டப்பட்ட) திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 3 பேரும் ஒன்றாக வந்து திறந்து வைத்த வரலாற்று சிறப்பு இந்த திரையரங்கிற்கு இருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கருணாநிதியும், எம்ஜிஆரும் தியேட்டரை திறந்து வைக்க, ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றினார்.
News August 17, 2025
அதிமுகவால் பாஜகவை விட முடியாது: மைத்ரேயன்

பாஜகவை மீண்டும் கழட்டி விட்டுவிட்டு தவெகவுடன் அதிமுக இணையலாம் என்ற தகவல் அரசியல் அரங்கில் உலாவுகிறது. ஆனால் அப்படி நிச்சயமாக நடக்காது, அதற்கு BJP-யும் அனுமதிக்காது என்கிறார் மைத்ரேயன். சமீபத்திய பேட்டி ஒன்றில், அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தல் மிகப்பெரிய தோல்வியை தரும் என்றார். ADMK-விலிருந்து பலரும் வெளியேறக் காரணம், சரியான தலைமை இல்லாததே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News August 17, 2025
ஊழலில் திமுகவுக்கு தேசிய விருது: EPS

எல்லாவற்றிலும் கமிஷன் கிடைப்பதால், விலைவாசி உயர்வு பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை என EPS விமர்சித்துள்ளார். வந்தவாசியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய விருது கொடுக்கலாம் என சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமையும்போது திமுக அரசின் 5 ஆண்டு ஊழல்களும் விசாரிக்கப்படும் என்றார். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப எதிரிகளைத் தோற்கடிக்க அமைக்கப்படுவது எனக் கூறினார்.