News March 11, 2025
ஒடிசா: 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர்

ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இருப்பதாக CM மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து 315 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 238 பேர் சரண் அடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 9, 2025
கோயில் பணத்தில் கல்லூரிகள்? இபிஎஸ் பேச்சுக்கு விளக்கம்

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்து தான் கட்ட வேண்டுமா என்றே இபிஎஸ் பேசியதாக ADMK IT Wing விளக்கமளித்துள்ளது.
News July 9, 2025
புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
News July 9, 2025
CM ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்

2 நாள்கள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார் CM ஸ்டாலின். அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பகுதியாக இப்பயணத்தை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொள்ளும் CM, மாலை திமுக நிர்வாகிகளைச் சந்தித்தபின் ரோடு ஷோ நடத்துகிறார்.