News September 17, 2024

ஜெர்மனியில் நர்ஸ் வேலை.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேருவோருக்கு இலவசமாக ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படும். மாத சம்பளம் 2,300 முதல் 3,300 யூரோ (ரூ.2 லட்சம் – 3 லட்சம்). வயது வரம்பு: 35 வயதிற்குள். கல்வித் தகுதி: Bsc or GMN. கூடுதல் தகவல்களை நான் முதல்வன் வலைதளத்திலோ, செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக ஊடக பக்கங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News April 27, 2025

J&K : தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை

image

J&K-ன் குப்வாரா மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில், தனது வீட்டில் இருந்த சமூக செயற்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்ராய் (45) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணம், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல் விசாரணை: என்ஐஏவிடம் ஒப்படைப்பு

image

26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் 60 தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும், அவர்களில் 14 தீவிரவாதிகளின் அடையாளங்கள் முகவரிகளுடன் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மேலும், 3 பேர் அடங்கிய என்ஐஏ குழு, புலனாய்வு அமைப்பின் தகவல்களை எடுத்துக் கொண்டது.

News April 27, 2025

கிட்டத்தட்ட வெளியேறிய நடப்பு சாம்பியன் KKR!

image

நேற்றைய PBKS vs KKR மேட்ச் மழையால் கைவிடப்பட்டதால், KKR-ன் பிளே – ஆப் கனவு கிட்டத்தட்ட கலைந்து விட்டது. ஆம், 9 மேட்சில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள KKR, 7 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இனி வரும் அனைத்து மேட்சையும் வென்றால், KKR 17 புள்ளிகளை பெறும். ஆனால், அப்போதும் மற்ற சில அணிகளின் தோல்வியை வைத்துதான் பிளே – ஆப் வாய்ப்பு KKR-க்கு கிட்டும். எந்த 4 அணிகள் பிளே- ஆப்பிற்கு முன்னேறும்?

error: Content is protected !!