News June 26, 2024

எண்ணும் எழுத்தும் திட்டம்: 1408 ஆசிரியர்களுக்கு பயிற்சி

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவ பயிற்சி 36 குழுவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சி முகாம் நேற்று (ஜூன் 25) பல்வேறு மையங்களில் தொடங்கியது. இதன் மூலம் 1,408 ஆசிரியர்கள் பயனடைவார்கள் என முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார். இன்றும் பயிற்சி நடைபெறுகிறது.

Similar News

News July 9, 2025

நெல்லை: சிறுமியை கொலை செய்து கற்பழித்த வாலிபர்

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், 17 வயது சிறுமியை காதலித்து வந்த மாரிமுத்து (26) என்பவர், அப்பெண் தன்னை தவிர வேறு ஒருவருடன் பேசியதால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், சிறுமி இறந்தப்பின் அவரது உடலை கற்பழித்ததாகவும் அந்த வாலிபர் வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் மாரிமுத்துவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 9, 2025

நாங்குநேரி டோல்கேட்டில் நாளை முதல் பேருந்து தடை

image

கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், தென் மாவட்ட மக்களின் பயணங்கள் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது. * மக்களே உங்கள் பயணங்களை முன் கூட்டியே திட்டமிடவும்*

News July 9, 2025

ராதாபுரத்தில் 15 குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும்

image

தமிழக சபாநாயகர் அப்பாவு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ராதாபுரம் கால்வாய் மூலம் விடுபட்ட 15 குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த 15 குளங்களும் நேரடி பாசனத்திலும் சேர்க்கப்படவில்லை. குளத்துப் பாசனத்திலும் சேர்க்கப்படாததால், அப்பகுதிகள் தொடர்ந்து வறட்சியாகவே உள்ளன. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!