News April 8, 2025
நம்பர்-1 துரோகி இபிஎஸ் : ரகுபதி விமர்சனம்

தமிழ்நாட்டின் நம்பர்-1 துரோகி யார் எனக் கேட்டால் அரசியல் தெரியாத 6ஆம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவான் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிதான் ஓபிஎஸ் என சாடிய அவர், இபிஎஸ் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள் என்று பதிலடியும் கொடுத்துள்ளார்.
Similar News
News December 25, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு!

தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹12,820-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,02,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,360 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News December 25, 2025
EPS-ஐ வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள்: வைத்திலிங்கம்

அதிமுக என்ற பூமாலை, இன்று குரங்கு கையில் மாட்டியுள்ளது என வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார். அந்த குரங்கு, OPS, தினகரன் என ஏராளமானவர்களை பிய்த்து போட்டுவிட்டதாக கூறிய அவர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க EPS இல்லாத அதிமுக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். மேலும், EPS-க்கு அதிமுகவின் கொள்கை, கோட்பாடு என எதுவுமே தெரியாது எனவும் அவரை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.
News December 25, 2025
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் ஏற்கெனவே குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபகாலமாக உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துக்களில் வாகனங்களை ஓட்டியவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர், முறையான உரிமம் இன்றி கனரக வாகனங்களை ஓட்டிய இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், 30 இந்தியர்கள் உள்பட 49 பேரை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.


