News April 8, 2025
நம்பர்-1 துரோகி இபிஎஸ் : ரகுபதி விமர்சனம்

தமிழ்நாட்டின் நம்பர்-1 துரோகி யார் எனக் கேட்டால் அரசியல் தெரியாத 6ஆம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவான் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிதான் ஓபிஎஸ் என சாடிய அவர், இபிஎஸ் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள் என்று பதிலடியும் கொடுத்துள்ளார்.
Similar News
News November 20, 2025
மசோதா ஒப்புதலுக்கு காலக்கெடு விதிக்க முடியாது: SC

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னருக்கு குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க முடியாது என SC அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. TN அரசின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது எனவும், மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
News November 20, 2025
சற்றுமுன்: விஜய்க்கு பெரும் அதிர்ச்சி

டிச.4-ல் சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அன்றைய நாளில் தி.மலை தீபம் நடைபெறவுள்ளதால் பரப்புரைக்கு அனுமதி தர இயலாது என கூறப்பட்டுள்ளது. டிச.6 (சனிக்கிழமை) அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அன்றும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடைசியாக, செப்.27-ல் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தார். விஜய் பரப்புரைக்கான இடர்கள் அகலுமா?
News November 20, 2025
வெள்ளை பட்டாணி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

புரதம், நார்ச்சத்தின் சிறந்த மூலமான வெள்ளை பட்டாணியை தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. *குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. *துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, சருமத்தை மிருதுவாக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. *இரும்புச்சத்து RBC-யை அதிகரிக்கிறது.


