News March 31, 2025

இனி 3 நாள்களில் PF பணம் பெறலாம்

image

PF பணத்தை வெளியே எடுக்க விரும்புவோர், அதற்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனை தீர்க்கும் வகையில், இனி 3 நாள்களில் பணம் எடுக்கும் வசதியை PF நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்திட்டம் நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை பணம் எடுக்க விரும்புவோர், ஆன்லைனில் அப்ளை செய்தால் அடுத்த 3 நாள்களில் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.

Similar News

News April 2, 2025

காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி ஆணவக்கொலை

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வித்யா என்ற கல்லூரி மாணவி வீட்டில் பீரோ விழுந்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காதலன் வெண்மணி அளித்த புகரின் பேரில் மாணவியின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனே தங்கையை ஆணவக்கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

News April 2, 2025

ட்ரம்புக்கு எதிராக 25 மணி நேரம் பேசிய எம்.பி.

image

அமெரிக்க செனட் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி எம்.பி. கோரி புக்கர் 25 நேரம் பேசி அரங்கத்தை அதிர வைத்தார். டிரம்பின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அதிரடியான கருத்துகளை அவர் முன் வைத்தார். செனட் சபை வரலாற்றில் அதிக நேரம் பேசிய ஸ்ட்ரோம் தர்மண்ட் சாதனையை கோரி முறியடித்துள்ளார். 1957ல் செனட் சபையில் 24 மணி நேரம் 18 நிமிடங்கள் ஸ்ட்ரோம் பேசியிருந்தார்.

News April 2, 2025

காய்கறிகளின் விலை உயர்வு

image

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!