News July 28, 2024
இனி ₹7.5 லட்சம் வரை கடன் பெறலாம்

₹1.5 லட்சமாக இருந்த மத்திய அரசின் மாதிரி திறன் கடன் திட்டத்தின் வரம்பு, தற்போது ₹7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 31 வரையில் கடன் வாங்கியுள்ள 10,077 நபர்களுக்கு, கடன் தொகையை நீட்டிப்பதற்காக ₹115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25,000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. வங்கிகள், நிதி, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களிலும் கடன்களை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
அமித் ஷா கேட்டும் அசையாத EPS

ராஜ்பசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் EPS. இதில் தொகுதி பங்கீட்டை விட ராஜ்யசபா சீட் பற்றி தான் நீண்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. குறிப்பாக கூட்டணியில் உள்ள GK வாசனுக்கு மறுபடியும் ராஜ்யசபா சீட் கொடுக்கும்படி அமித்ஷா கேட்டாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த EPS, அன்புமணி மற்றும் அதிமுகவே 2 சீட் என உறுதியாக கூறிவிட்டாராம்.
News March 3, 2026
விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி

இண்டிகோ நிறுவன விமான பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி பாலியல் ரீதியில் அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரனும் அவரது நண்பரும் அத்துமீறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 3, 2026
பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா?

இஸ்ரேல், US-ன் தாக்குதலை அடுத்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாகவே இந்தியாவுக்கு 40% கச்சா எண்ணெயும், 60% LPG-யும் கப்பலில் வருகின்றன. இந்நிலையில் ஈரானின் தடையால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அச்சம் எழுந்தது. எனினும் அடுத்த 25 நாள்களுக்கு கச்சா எண்ணெய் & 30 நாள்களுக்கான LPG-யும் கையிருப்பில் உள்ளதால், பெட்ரோல் டீசல் விலை உயராது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


