News March 18, 2025
இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2025
75% வாக்குறுதிகள் பெண்டிங்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர்கள் 2024இல் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்விக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார். அப்போது 2024இல் அமைச்சர்கள் 160 வாக்குறுதிகள் அளித்ததாகவும், அதில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 18, 2025
ஏப்ரலில் கார்கள் விலையை உயர்த்தும் மாருதி சுசூகி, டாடா

கார்கள் விலையை மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை விரைவில் உயர்த்தவுள்ளன. தயாரிப்பு செலவு அதிகரித்து விட்டதால், வரும் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கார்கள் விலையையும் 4% உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காரணத்தை முன்வைத்து, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வணிக பயன்பாடு கார்கள் விலையை 2% உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
News March 18, 2025
இந்த வாட்ஸ் அப் நம்பர்கள் உங்க ஃபோனில் அவசியம்!

ஏடிஎம் கார்டு திருடுப் போதல், வங்கிக் கணக்கில் பணம் மாயமாதல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், முதலில் கைக்கொடுப்பது வங்கிகள்தான். எனவே, வங்கிகளின் வாட்ஸ் அப் சேவை எண்கள் செல்போனில் இருத்தல் அவசியம். • எச்டிஎப்சி – 70700 22222. • எஸ்பிஐ – 90226 90226. • கனரா – 90760-30001 • ஐடிஎப்சி – 95555 55555. • இந்தியன் வங்கி – 87544 24242. ஐசிஐசிஐ – 86400 86400. • யூனியன் வங்கி – 96666 06060.