News March 18, 2025
இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2025
ரயில் ரத்தானால் டிக்கெட் கட்டணம் என்னவாகும்?

விபத்துகள், வெள்ளம், பந்த் உள்ளிட்டவற்றால் ரயில் ரத்து செய்யப்படுமாயின், ஏற்கெனவே டிக்கெட் எடுத்தோருக்கு அக்கட்டணத்தை ரயில்வே திருப்பித் தரும். கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்திருக்கும்பட்சத்தில், டிக்கெட்டை 3 நாட்களுக்குள் எந்த கவுன்ட்டர்களிலும் திருப்பி அளிக்கலாம். முழு பணமும் திருப்பித் தரப்படும். ஆன்லைனில் டிக்கெட் எடுத்திருந்தால், அது தானாகவே ரத்தாகி பணம் வரவு வைக்கப்படும்.
News March 18, 2025
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வன், அண்மையில் ஆட்சியர், எஸ்பியை மாற்றி விடுவேன் என <<15605340>>பேசியது<<>> சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பதவியில் இருந்து தர்மசெல்வன் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மணி எம்பி நியமனம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
இதுதான் நாகதோஷமோ?… துரத்தி துரத்தி கடிக்கும் பாம்பு

ஆந்திராவில் விநோத நிகழ்வால் அவதிப்பட்டு வருகிறார் 50 வயதான சுப்ரமணியம். எங்கு சென்றாலும், தன்னை விரட்டி விரட்டி பாம்பு கடிப்பதாக அவர் குமுறுகிறார். 20 வயதில் தொடங்கி இப்போதுவரை பல டஜன் முறைகள் தன்னை பாம்பு கடித்ததாக கூறும் சுப்ரமணியம், வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தாலும் பாம்பு கடி தொல்லைக்கு தீர்வு கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கிறார். சம்பாதிப்பது எல்லாமே சிகிச்சைக்கே செலவாகி விடுகிறதாம்.