News March 18, 2025
இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2025
உயர்ந்த மனிதர் காலமானார்!

உலகின் உயரமான மனிதர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த நசீர் சூம்ரோ (55), உடல்நலக்குறைவால் காலமானார். சிந்து மாகாணத்தை சேர்ந்தவரான நசீர், 7 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். சராசரி மனிதர்களை விட இவர் 3 அடி உயரம் கொண்டவர். நுரையீரல் நோயாலும், உடல் இணைப்பு பகுதிகளில் வலியாலும் பல ஆண்டுகளாக அவதியுற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தானின் அடையாளமாக உலகம் முழுவதும் வலம் வந்தவர் சூம்ரோ.
News March 18, 2025
இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (1/2)

1947இல் பிரிட்டிஷார் சுதந்திரம் அளிக்கும் முன்பு, நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக பிரித்தனர். அப்போது 1947 ஆகஸ்ட் 14இல் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் கலைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் என விரும்பிய பக்கம் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் பக்கம் 2.60 லட்சம் வீரர்களும், பாகிஸ்தான் பக்கம் 1.31 லட்சம் வீரர்களும் சேர்ந்தனர்.
News March 18, 2025
இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (2/2)

கூர்க்கா படையை சரிபாதியாக இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் பிரித்து கொண்டன. பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்த 10,000 பேர் இந்திய விமானப்படையிலும், 3,000 பேர் பாகிஸ்தான் விமானப்படையிலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த 8,700 பேரில் 5,700 பேர் இந்திய கடற்படையிலும், எஞ்சிய 3,000 பேர் பாகிஸ்தான் கடற்படையிலும் இணைந்தனர். இவை அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவம் மேற்பார்வையில் நடந்து முடிந்தது.