News March 16, 2024
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இனி ஒரே சான்றிதழ்

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities, Denotified Tribes என 2 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டதை ஆய்வு செய்து, ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
இந்தியாவுக்கு எதிரான தொடர்: பேட் கம்மின்ஸ் விலகல்!

முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் நியூசிலாந்து & இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு Lumbar bone stress பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் நவம்பரில் தொடங்கும் ஆஷஸ் தொடரிலும் விளையாடுவது சந்தேகமாகி இருக்கிறது. இந்திய அணி வரும் அக்டோபர் மாதம் ஆஸி.க்கு எதிராக 3 T20, 5 ODI போட்டிகளில் விளையாடவுள்ளது.
News September 2, 2025
ஊழியர்களின் பக்கம் திமுக நிற்பதில்லை: அண்ணாமலை

தொடக்க பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அண்ணாமலை சாடியுள்ளார். சுமார் 2,000 தொடக்க பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்படப் போவதில்லை என தெரிவித்த அவர், எனினும் திமுகவுக்கு அதனை பரிசீலிக்க மனமில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
News September 2, 2025
EPS மீது அதிருப்தி: அதிமுகவில் இருந்து MLA விலகல்?

EPS மீதான அதிருப்தியை அடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதாரவாளர்களுடன் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், பவானிசாகர் MLA பண்ணாரி பங்கேற்றது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், 5-ம் தேதி அவர் எடுக்கவுள்ள முடிவையே, பண்ணாரியும் எடுப்பார் எனக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.