News March 22, 2025

இனி மாநில மொழிகளில் தொடர்பு: அமித்ஷா அதிரடி

image

மும்மொழிக்கொள்கை தொடர்பான சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு இந்திய மொழியும் நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் என அமித்ஷா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், இந்தி எந்த மொழிக்கும் போட்டியில்லை என்றார். மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அனைத்து முதல்வர்கள், எம்.பிக்கள், பொதுமக்களுடனான கடிதத் தொடர்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 22, 2025

காங்கிரஸ் மூத்த தலைவர் தேவேந்திர சர்மா காலமானார்

image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்திர சர்மா (66) உடல்நலக்குறைவால் காலமானார். ஒடிசாவின் ஆவுல் (Aul) தொகுதியில் 2014 – 2019 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேவேந்திர சர்மாவின் மறைவுக்கு ஒடிசா CM மோகன் மாஜி, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 22, 2025

சித்தராமையா பங்கேற்காதது ஏன்?

image

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பங்கேற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் அவருக்கு உடன்பாடு எதுவும் இல்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் பங்கேற்காதது ஏன் என்பதற்கான விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து டி.கே.சிவக்குமார், காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே சித்தராமையாவால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என விளக்கமளித்துள்ளார்.

News March 22, 2025

ஐதராபாத்தில் 2 ஆவது கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

image

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் 2 ஆவது கூட்டம் ஐதராபாத்தில் நடக்கும் என TN CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த முதல் கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க 3 மாநில CMகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன் பேரில், அடுத்த கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!