News April 22, 2025
இனி குழந்தைகளும் வங்கி கணக்கு தொடங்கலாம்!

பள்ளி மாணவ, மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கான மானியம் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாமாகவே வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் இனி அவர்கள் சேமிப்பு, டெபாசிட் கணக்குகளை தொடங்கி, இயக்கவும் முடியும்.
Similar News
News April 22, 2025
ஜாதி சான்றிதழில் எழுத்துப் பிழை கூடாது: ஐகோர்ட்

ஜாதி சான்றிதழில் சாதி பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ‘இசை வேளாளர்’ என்ற சாதியின் பெயரை ‘இசை வெள்ளாளர்’ எனக் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மாநில அரசு பிழையின்றி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
News April 22, 2025
தங்கம் போல் உயரும் எலுமிச்சை: கிலோ ₹150

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இளநீர், எலுமிச்சை என பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் தாகம் தணிக்க நம்புவது எலுமிச்சை ஜூஸ்தான். இந்தச் சூழலில், ஒரு கிலோ எலுமிச்சை விலை ₹150 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ ₹120க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சாமான்ய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News April 22, 2025
டெல்லியில் தமிழர்கள் வீடுகளை அகற்ற கடும் எதிர்ப்பு!

டெல்லி ஜன்புரா பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ, சாலை மேம்பாட்டிற்காக ‘மதராஸி’ குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வாழ்வாதாரம், பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.