News November 25, 2024
நவ. 25: வரலாற்றில் இன்று

*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பலத்த சூறாவளியில் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்ததில் 30,000 பேர் உயிரிழப்பு. *1866 – அலகாபாத் ஐகோர்ட் திறப்பு. *1930 – ஜப்பானில் ஒரே நாளில் 690 நிலநடுக்கங்கள் பதிவு. *1936 – ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இடையே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்து. *1941 – லெபனான் பிரான்சிடம் இருந்து விடுதலை. *1949 – இறுதி செய்யப்பட்ட அரசியலமைப்பில் அம்பேத்கர் கையெழுத்திட்டார்.
Similar News
News November 3, 2025
உலகின் மிகவும் குளிர்ச்சியான நாடுகள்

சில நாடுகளில் கடும் குளிரால், பனி மூடிய மலைகள், உறைந்த நதிகள் மற்றும் பனிச்சாரல் நிறைந்த காற்று இருக்கும். குளிர்காலங்களில் வெப்பநிலை மைனஸ் அளவிற்கும் குறைந்து காணப்படும். இது, சிலருக்கு சவாலாகவும், சிலருக்கு ரசனையாகவும் இருக்கும். எந்தெந்த நாடுகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த நாடு எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது வேதனை அளிப்பதாக கூறிய அவர், மத்திய அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுக்கு, உரிய அழுத்தத்தை தமிழக அரசு உண்மையாக கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 3, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… அறிவிப்பு

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் ஒப்படைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


