News June 27, 2024

நெல்லை கலெக்டர் அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நலவாரியத்தில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்ப படிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

நெல்லை பெண்ணிடம் ரூ.6.89 லட்சம் நூதன மோசடி

image

தாழையூத்தை சேர்ந்த தீபா என்பவர் (45), பகுதிநேர வேலை என்ற பேஸ்புக் விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் ஹோட்டல் ரிவ்யூ மோசடியில் ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சிறிய தொகை தந்து நம்பிக்கை ஏற்படுத்திய மர்மகும்பல், பின் ரூ.6.89 லட்சம் பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு அனுப்ப வைத்து, திரும்பப் பெற முயலும்போது மேலும் பணம் கேட்டனர். மோசடியை உணர்ந்த தீபா புகாரளித்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 14, 2025

நெல்லை: 15 வயது சிறுமி உயிரிழப்பு!

image

சீவலப்பேரி அருகே பாலாமடை கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி பட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். உள்ளூர் சிகிச்சைக்குப் பின் நிலைமை மோசமடைந்ததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலைப் பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

நெல்லை: ECR ல் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே, நவ்வலடி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று (டிச.13) இரவு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த இருவர், திடீரென ஆத்தங்கரை பள்ளிவாசல் என்னுமிடத்தில், திடீர் விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!