News June 27, 2024
நெல்லை கலெக்டர் அறிவிப்பு

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நலவாரியத்தில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்ப படிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
நெல்லை: ஆசையை தூண்டி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண்

நெல்லையைச் சேர்ந்த 37 வயதான இளைஞரிடம் தர்ஷினி என்ற பெண் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஷேர் மார்க்கெட்டிங் முதலீடு செய்ய ஆசையை தூண்டினார். முதலில் ரூ.6000 முதலீடு செய்து, அந்த பணத்தை எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் படி மேலும் மேலும் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.30 லட்சம் செலுத்தி மீட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 19, 2026
நெல்லை: நாய் குறுக்கே பாய்ந்ததால் ஒருவர் பலி!

கீழகோவிலான்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவலைக்காரன் குளம் அருகே பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் இன்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
News January 19, 2026
நெல்லை: 12th போதும்., ஆதாரில் வேலை! தேர்வு இல்லை..

நெல்லை மக்களே, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) காலியாக உள்ள 282 ஆதார் சூப்பர்வைசர் /ஆபரேட்டர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 வயது பூர்த்தியடைந்த ஐடிஐ, டிப்ளமோ, 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஜன 31.க்குள் இங்கு <


