News June 27, 2024
நெல்லை கலெக்டர் அறிவிப்பு

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நலவாரியத்தில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்ப படிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
நெல்லை: இனி Whatsapp மூலம் எளிய தீர்வு!

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள காவல் கிணறு என்ற இடத்திற்கு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது வள்ளியூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முஜாஹித் (22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த ரிஸ்வான் படுகாயத்துடன் பாளை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
News December 28, 2025
நெல்லை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


