News April 18, 2024

இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

துபாயில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், துபாயில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +971501205172, +971569950590, +971507347676, +971585754213 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 11, 2025

BJP நட்பை விரும்பாத OPS.. விஜய்யுடன் கூட்டணியா?

image

தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பை அவர் தவிர்த்துவிட்டு, சொந்த ஊரிலேயே தங்கிவிட்டாராம். BJP மீது அதிருப்தியில் இருந்த அவருடன் TTV சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், OPS தரப்பு பாஜகவுடன் மீண்டும் இணைவதை விரும்பவில்லையாம். அதுமட்டுமல்லாமல், கூட்டணி மாறும் (விஜய்) முடிவில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

News August 11, 2025

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

image

திருவனந்தபுரத்திலிருந்து 5 MP-க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், உடனே சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.

News August 11, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்.. வெல்லப்போவது யார்?

image

லோக்சபா, ராஜ்யசபா என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து தற்போது 781 MP-க்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 MP-க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணியின் வேட்பாளரே வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், வரும் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!