News November 26, 2024

உடனே நோட் பண்ணுங்க: உதவி பெற அவசர உதவி எண்கள்

image

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அவசரகால செயற்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்திற்கு 1800-233-4233, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 04364-222588 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்திற்கு WHATSAPP எண் 94885 47941, கடலூர் மாவட்டத்திற்கு WHATSAPP எண் 94899 30520 அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1077 என்ற இலவச எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

ஆசிய கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு

image

2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சுப்மன் கில் அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது. டி20 ஃபார்மெட்டில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் இந்த போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டிகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.

News August 19, 2025

BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி

image

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

News August 19, 2025

மனிதாபிமானம் மலர்ந்தால் உலகம் அன்பின் தோட்டமாகும்

image

இன்று உலக மனிதாபிமான தினம். துயரத்தில் இருப்பவருக்கு நம்பிக்கையாக, பசியால் வாடுபவருக்கு அன்னமாக, கண்ணீரில் மூழ்குபவருக்கு ஆறுதலாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களின் இதயத்தில் கருணை இருந்தால் உலகம் அமைதி அடைந்து, அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய தாயகமாகிறது. அதனை நோக்கி முன்னேறுவது மனிதனின் ஆகச்சிறந்த பணியாகும். மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது Best quality அல்ல, அது Basic quality.

error: Content is protected !!