News March 20, 2024
4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம். விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ எனும் இணையதளம் மூலம் மே 14க்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 27, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வியால் டென்ஷனான EPS

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அதை அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்; அதிமுகவில் இல்லாத ஒருவர் குறித்து பதிலளிக்க முடியாது’ என்று இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால், கொங்குவில் கட்சியை பலப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
News November 27, 2025
மங்கும் WTC பைனல் கனவு!

SA-வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், 2027 WTC பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு இந்தியாவுக்கு குறைந்துள்ளது. பைனலுக்கு முன்னேற 60% புள்ளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 48.15% புள்ளிகளை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 டெஸ்டில் 6 வெற்றி, 2 டிரா அல்லது 7 வெற்றிகளை அடைய வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா உள்ளது. இந்தியா அடுத்ததாக இலங்கை, நியூசிலாந்து, ஆஸி. அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
News November 27, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா? CM ஸ்டாலின் ஆலோசனை

வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது; மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது; உதவி மையங்கள் அமைப்பது; அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.


