News March 20, 2024
4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம். விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ எனும் இணையதளம் மூலம் மே 14க்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 1, 2025
எங்கு சென்றாலும் இந்தியாவை மறக்காதீங்க: CPR

அடுத்த கூகுள், டெஸ்லா நமது நாட்டில் உருவாக வேண்டும் என VP CPR கூறியுள்ளார். ஹரியானாவின் குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், PM மோடி கொண்டுவந்த தேசிய கல்வி கொள்கை இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் & நாகரிகத்தில் வேரூன்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார். மேலும், இளைஞர்கள் எங்கு சென்றாலும், இந்தியா எப்போதும் இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
அகண்டா-2 டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கிய Fan

டிச.5-ல் அகண்டா 2 வெளியாகவுள்ளதால் உலகளவில் பாலையா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதன் ஒருபகுதியாக ஜெர்மனியை சேர்ந்த பாலையா ரசிகர் ஒருவர் இப்படத்தின் ஒற்றை டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அகண்டா 2 படத்தின் Super Fan Ticket-ஐ வேறொருவர் ₹1 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
தவெக வலையில் சிக்கும் அதிமுக சீனியர்கள்?

செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பொள்ளாச்சி ஜெயராமன், வைத்திலிங்கம்(OPS தரப்பு), வெல்லமண்டி நடராஜன்(OPS தரப்பு) தற்போது சிக்கியிருக்கிறார்களாம். இவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் தவெக ஈடுபட்டுவருவதாக பேசப்படுகிறது. இவர்கள் தவெகவுக்கு சென்றால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு மேலும் பின்னடைவு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


