News March 29, 2024

ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி காங்கிரஸுக்கு நோட்டீஸ்

image

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை, இதற்கு ரூ.1,700 கோடி செலுத்தும்படி ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியிருப்பது காங்கிரசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Similar News

News September 18, 2025

இபிஎஸ் உடன் எந்த பகையும் இல்லை: டிடிவி

image

இபிஎஸ் உடன் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா, அண்ணாமலை கூறியதால்தான் NDA கூட்டணியில் இணைந்ததாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என நயினார் கூறியதாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். CM வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஒருபோதும் அமமுக ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

News September 18, 2025

இந்தியா மீதான வரி 15% ஆகக் குறையும்: ஆனந்த நாகேஸ்வரன்

image

இறக்குமதி வரி தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்(CEA) ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பரஸ்பர இறக்குமதி வரியானது 15% ஆகக் குறையும் என்ற அவர், வரும் நவம்பர் 30-க்குள் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியை அமெரிக்கா விலக்கிக் கொள்ளக்கூடும் என்றும் கணித்துள்ளார்.

News September 18, 2025

யார் இந்த மருது அழகுராஜ்?

image

1998-ல் அதிமுகவில் இணைந்து 2004 வரை பயணித்தார். பின்னர் தேமுதிகவில் இணைந்த அவர், 2009-ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். ‘நமது எம்ஜிஆர்’ என்ற அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், OPS-ன் தீவிர ஆதரவாளராக மாறினார். ஜெ.,வின் பல அரசியல் உரைகளையும் எழுதியுள்ளார். திருப்பத்தூரில் தேமுதிக (2006), அதிமுக (2021) சார்பில் போட்டியிட்டிருந்தார்.

error: Content is protected !!