News July 5, 2024
கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் வரும் 6ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊதியம் வழங்கிட தேவையான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. எனினும், நிலுவைத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை.
Similar News
News September 22, 2025
மூளை நன்றாக செயல்பட

மூளை நன்றாக செயல்படுவதால் நினைவாற்றல், கவனம், முடிவுகள் எடுப்பது ஆகியவை மேம்படுகின்றன. சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்க முடியும். இதனால் மனநலன் கூடும். இதற்கு என்ன செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த செயல்பாட்டை செய்யுங்கள். மேலும், உங்களுக்கு தெரிந்த வேறு ஏதேனும் செயல்பாடு இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
அன்புமணி கைப்பாவையாக செயல்படுகிறார்: MLA அருள்

அன்புமணி, அவரது தந்தையை சந்திக்க வேண்டும், அவர் பேச்சை கேட்பதாக கூற வேண்டும் என்று MLA அருள் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்தாலே, அவர் எதிர்பார்த்ததும், எதிர்பாராததும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்புமணி கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இயக்குபவரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ராமதாஸை இயக்க யாரும் பிறக்கவில்லை, இனி பிறக்கவும் மாட்டார்கள் என தெரிவித்தார்.
News September 22, 2025
நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கிறீர்களா?

நவராத்திரியில் அம்பாள் அருள்பெற பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால், டாக்டரை பரிசீலிக்காமல், உண்ணாவிரதம் இருப்பது உடல்நலனுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சோர்வு, தலைச்சுற்றல், ரத்த சர்க்கரை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.