News April 10, 2024

சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை

image

திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து விசிக கட்சி விளக்கமளித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், அங்கு வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டிற்கு நேற்று இரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் உள்ளிட்ட எதையும் கைப்பற்றவில்லை என அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

Similar News

News April 24, 2025

நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (1/2)

image

நேரு-அயூப்கான் முன்னிலையில் உலக வங்கி மத்தியஸ்தத்துடன் 1960-ல் இந்தியா, பாக். இடையே சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கிழக்கு நதிகளான சட்லஸ், பீயாஸ், ராவி நதிநீர் அனைத்தும் இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் நதிநீர் பாகிஸ்தானிற்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் 33 மில்லியன் ஏக்கர் இந்திய விவசாய நிலமும், 135 மில்லியன் ஏக்கர் பாகிஸ்தான் விவசாய நிலமும் பயனடையும்.

News April 24, 2025

நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (2/2)

image

மேடான இந்திய பகுதிகளில் உருவாகி கீழ்நோக்கி வரும் இந்நதிகளின் நீரையே பாகிஸ்தான் விவசாயிகள் அதிகம் நம்பி உள்ளனர். பாகிஸ்தானில் குடிநீருக்கும் இந்நீரே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்நீரை இந்தியா வழங்கி வந்தது. தீவிரவாதத்தை தூண்டிவிடுவதை நிறுத்தாததால், தற்போது இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News April 24, 2025

கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்ததாகவும், பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக திகழ்ந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவருக்கு செய்யும் கவுரவம் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!