News June 28, 2024
திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு: எல்.முருகன்

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்பி ஆர்.கே.செளத்ரி தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், அரசு நிர்வாகத்தில் செங்கோலின் பங்கு குறித்து திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளதாகவும், இதை உணர்ந்து தான் பிரதமர் நாடாளுமன்றத்தில் அதை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் தமிழர்களின் பெருமை மிக்க அடையாளம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 20, 2025
பாசிச சக்திகளை விரட்ட வேண்டும்: DCM உதயநிதி

2026 தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று என DCM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பாசிச சக்திகள் பழைய அடிமைகளுடன் புதுப்புது அடிமைகளை தேடி கண்டுபிடித்துள்ளதாகவும், தேர்தலில் நம்மை எதிர்க்கும் அவர்களை மக்கள் ஆதரவுடன் விரட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் சர்வாதிகாரத்திற்கும், சமூக நீதிக்கும் இடையேயானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 20, 2025
காலி மருத்துவ இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு

TN-ல் MBBS, BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் இடையில் நின்றுவிடுவது உள்ளிட்ட காரணங்களால் 23 MBBS, 27BDS இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் காலியிடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று முதல் 23-ம் தேதி வரை சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
News December 20, 2025
இனிதான் உண்மையாக தேர்தல் நடக்கவுள்ளது: தமிழிசை

SIR பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் 97.35 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தமிழிசை கூறியுள்ளார். இனிமேல்தான் உண்மையாகவே தேர்தல் நடக்கவுள்ளது என்ற அவர், ஏமாற்றியவர்கள் ஏமாறப்போகும் தேர்தலாக இது இருக்கும் என்றார். தேர்தல் முடிந்தபின் SIR-ஐ நடத்தியிருந்தால் நீக்கப்பட்டவர்கள் எல்லாம் வாக்களித்து போலி ஜனநாயகத்தை உருவாக்கியிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.


