News March 15, 2025
1,000 கோடியல்ல, லட்சம் கோடி – குண்டை தூக்கிப் போடும் சீமான்

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக அண்மையில் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், டாஸ்மாக்கில் ரூ. 1 லட்சம் கோடிக்குமேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசை காப்பாற்ற ரூ.1,000 கோடி மட்டுமே முறைகேடு எனக் கூறி இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News July 4, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. திருவள்ளூர், கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும்,சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
News July 4, 2025
போராட்டம் நடத்த தவெகவுக்கு என்ன அவசரம்? ஐகோர்ட்

போலீசுக்கு அழுத்தம் தரவேண்டாம் என தவெக-வுக்கு சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பே கடிதம் தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. போலீசாருக்கு நிறைய வேலைகள் உள்ளதாக தெரிவித்த கோர்ட் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவெகவுக்கு என்ன அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனுதாக்கல் செய்திருந்தது.
News July 4, 2025
FLASH: தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.