News May 17, 2024
அதானி நிறுவன முதலீட்டை நிறுத்துவதாக நார்வே அறிவிப்பு

அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்தப் போவதாக நார்வே அரசின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2021இல் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சியின்போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாகக் குற்றம்சாட்டிய நார்வே அரசு, விதிமீறல் நிறுவனங்களின் பட்டியலில் அதானி நிறுவனத்தைச் சேர்த்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்கவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
Similar News
News November 15, 2025
வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 1GB/டே.. அரசின் PM WANI திட்டம்!

இணையவசதி என்பது அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள நிலையில், நாட்டின் அனைத்து மக்களும் இணையவசதி பெற, PM WANI என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. சிறு கடைகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் Wi-Fi Hub-ஆக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 150 Mbps வேகத்தில் 1GB/ day வழங்கப்படுகிறது. PM WANI ஆப்பை டவுன்லோட் செய்து எளிதில், இந்த திட்டத்தில் சேரலாம்.
News November 15, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. இன்று முதல் அறிவிப்பு

பொங்கல் பரிசு வழங்கும் பணியை தமிழக அரசு இப்போதே தொடங்கிவிட்டது. நவ.15 முதல்(இன்று) ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்தார். இதனையடுத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கத் தொடங்கியுள்ளனர். மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை குறித்தும் அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
News November 15, 2025
300 MBBS காலியிடங்கள்… மாணவர்களுக்கு ஒரு சான்ஸ்!

TN-ல் மருத்துவ படிப்புகளுக்கு 3 கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகும் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. சில தனியார் கல்லூரிகள் நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் கேட்டதால் பல மாணவர்கள் விலகியதே இதற்கு காரணம். இதுபற்றி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சுற்று கவுன்சிலிங் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சற்று குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இது ஒரு நல்ல சான்ஸ் என கூறப்படுகிறது.


