News May 17, 2024
அதானி நிறுவன முதலீட்டை நிறுத்துவதாக நார்வே அறிவிப்பு

அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்தப் போவதாக நார்வே அரசின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2021இல் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சியின்போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாகக் குற்றம்சாட்டிய நார்வே அரசு, விதிமீறல் நிறுவனங்களின் பட்டியலில் அதானி நிறுவனத்தைச் சேர்த்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்கவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
Similar News
News October 31, 2025
TN-ல் மீண்டும் Ford: ₹3,250 கோடிக்கு ஒப்பந்தம்

கடந்த 2022-ல், ஏற்றுமதி சரிந்ததால் Ford நிறுவனம், TN-ல் செயல்பட்டு வந்த தனது ஆலையை மூடியது. இந்நிலையில், சமீபத்தில் CM ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, TN-ல் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க Ford நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று TN-ல் மீண்டும் தனது கார் உற்பத்தியை தொடங்குகிறது Ford. ₹3,250 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் CM முன்னிலையில் கையெழுத்தானது.
News October 31, 2025
நயினாருடன் அதிமுகவினர் ஆலோசனை

நெல்லை BJP ஆபீஸில் நயினாருடன் அதிமுக ex அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பேட்டியளித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், அந்த மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று விமர்சித்தார்.
News October 31, 2025
BREAKING: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச laptop வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச்சுக்குள் இலவச லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படும் என TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்களை வழங்க HP, Dell, Acer ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. laptop விநியோக திட்டத்தை தொடங்குவது குறித்து DCM உதயநிதி தலைமையிலான குழு முடிவெடுக்கும்.


