News October 23, 2024
ரஷ்யாவுக்கு 3000 வீரர்களை அனுப்பிய வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவ 3,000 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக SK நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது, டிசம்பருக்குள் 10,000 வீரர்களை அனுப்ப ரஷ்யாவுடன் NK ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், சூழலுக்கு ஏற்ப அவர்கள் களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே SKவின் குற்றச்சாட்டுகள் போலி என ரஷ்யா மறுத்துள்ளது.
Similar News
News November 27, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை!

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய 2 தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
சட்டையில் ஜெ., படம்: தோளில் TVK துண்டு

செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த போது, விஜய் அவருக்கு TVK துண்டு போட்டார். அப்போது, அவரது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது ஆச்சர்யத்துடன், கேள்வியையும் எழுப்பியது. இதற்கு விளக்கமளித்த செங்கோட்டையன், ‘இது ஜனநாயக நாடு; யாரோட புகைப்படத்தை வேண்டுமானாலும் வச்சுக்கலாம்’ என்று தெரிவித்தார். கட்சி மாறினாலும், பாசம் இன்னும் போகவில்லை போல என பலர் இதுபற்றி கருத்து கூறி வருகின்றனர்.
News November 27, 2025
BREAKING: புயல் உருவானது.. பேய் மழை வெளுக்கும்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக வலுப்பெற்றிருப்பதாக IMD அறிவித்துள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே திசையில் சுமார் 700 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிட்வா புயல் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திற்கு 2 நாள்கள் <<18402600>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது.


