News March 19, 2024
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

வடகொரியா நேற்று தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை பாகங்கள் விழுந்துள்ளது. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் சியோல் பயணம், அமெரிக்கா – தென்கொரியா கூட்டு ராணுவப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா இந்த சோதனையை நடத்தியுள்ளது.
Similar News
News August 12, 2025
மீண்டும் சரிந்த இந்தியப் பங்குச்சந்தைகள்!

நேற்று(ஆக.11) ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(ஆக.12) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிந்து 80,235 புள்ளிகளிலும், நிஃப்டி 97 புள்ளிகள் சரிந்து 24,487 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. Reliance, Infosys, TCS, HDFC Bank, M&M உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?
News August 12, 2025
30 வயதை கடந்த பெண்களே.. இத கவனியுங்க!

பெண்கள் 30 வயதை அடைந்து விட்டால், இந்த டெஸ்ட்டுகளை செய்து கொள்வது அவசியம்.
➤Mammography: மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
➤Thyroid Test: எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் ஆகியவற்றை கண்டறிய உதவும் டெஸ்ட்.
➤Pap Smear test: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய உதவும்.
➤Complete blood count (CBC): ரத்த சோகை குறித்து அறிந்து கொள்ள, இந்த டெஸ்ட் செய்யுங்கள். SHARE IT.
News August 12, 2025
‘தாயுமானவர் திட்டம்’ தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி

TN அரசின் ‘<<17336334>>தாயுமானவர் திட்டம்<<>>’ தேமுதிக மற்றும் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என பிரேமலதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2006 தேர்தலின்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தேமுதிக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த திட்டத்தையே தற்போது TN அரசு முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ளதாக கூறிய பிரேமலதா, அன்று ஏளனமாக சிரித்தவர்கள் இன்று எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.