News October 8, 2025

3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

image

2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான மேம்பாட்டுக்காக (For the development of metal–organic frameworks) ஜப்பானின் சுகமு கிடகாவா, ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஓமர் எம்.யாகி ஆகியோருக்கு நோபல் விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

Similar News

News October 8, 2025

இதெல்லாம் கண்களுக்கு தெரியும்.. ஆனா தெரியாது

image

அளவில் பெரியதாக இருந்தால் எளிதாக கண்களுக்கு தென்படும். ஆனால், அளவில் சிறியதாக இருப்பதை, பலராலும் அடையாளம் காண முடியாது. சிறியதாக இருப்பவை, தனித்துவமாகவும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலே, சிலவற்றை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களை ஆச்சரியப்பட வைத்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 8, 2025

கரூர் துயரம்.. கண்ணீர் சிந்திய விஜய்

image

கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். குறிப்பாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துருவ் விக்னேஷின் அத்தையுடன் பேசியபோது, குழந்தை புகைப்படத்தை பார்த்துக் கண்ணீர் சிந்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் தாயார் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த அவர், மேலும் வேதனையடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

News October 8, 2025

விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவ ராஜ்குமார்

image

விஜய் தனது அரசியல் பயணத்தில் யோசித்து நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிவ ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பேச்சு நன்றாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், கரூர் துயர் ஒரு நேரக்கூடாத நிகழ்வு என்றும், அதனால் வருத்தமடைந்ததாகவும் கூறினார்.

error: Content is protected !!